பிரிட்டன் பிரஜை ஒருவருக்கு ஈராக் நீதிமன்றம் விடுத்த தீர்ப்பால் அதிர்ச்சி
ஈராக்கிலிருந்து தொல்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் பிரிட்டன் பிரஜை ஒருவருக்கு ஈராக் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடுமையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற புவியியலாளர் ஜிம் ஃபிட்டன் என்பவருக்கே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ல நிலையில், இந்த தீர்ப்பு, பாக்தாத்தில் உள்ள அவரது வழக்கறிஞர் உட்பட நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
66 வயதான ஜிம் ஃபிட்டனுக்கு எந்த குற்ற நோக்கமும் இல்லை என அவரும் அவரது குடும்பத்தினரும் வாதிட்டனர். அதேவேளை ஃபிட்டனுடன் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஒரு ஜெர்மன் நாட்டவர் இந்த வழக்கில் குற்ற நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை எனக் கண்டறியப்பட்டு விடுவிக்கப்படுவார் என கூறப்படுகின்றது.
சுமார், 200 ஆண்டுகளுக்கும் மேலான தொல் பொருட்களை எடுத்ததன் மூலம், அவற்றை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல எண்ணி, அவற்றைக் கடத்தும் குற்ற நோக்கத்தை ஃபிட்டன் கொண்டிருந்தார் என அரசு தொழில்நுட்ப விசாரணையின்படி தெரியவந்துள்ளதாக வழங்கை விசாரித்த நீதிபதி ஜாபிர் அப்த் ஜாபிர் தெரிவித்தார்.
ஃபிட்டனின் வழக்கில் தலையிடவும், உதவவும் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தின் செயலற்ற தன்மையால் விரக்தியடைந்த அவரது குடும்பத்தினர், 100,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துகளைக் கொண்ட ஒரு மனுவை சமர்ப்பித்தமை இந்த வழக்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அதேவேளை பாக்தாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரி இந்த வழக்கில் அதன் தொடர்பு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஃபிட்டனின் உடைமையில் மொத்தம், 12 மட்பாண்டங்கள் மற்றும் பிற துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஈராக் அதிகாரிகளால் கூறப்படும் நிலையில், தண்டனைக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.