உக்ரைன் போரில் அணு குண்டு பயன்படுத்த வாய்ப்பா? ரஷ்யாவின் பதில்!
உக்ரைன் போரில் அணு குண்டு பயன்படுத்த வாய்ப்புள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.
உக்ரைன் போரில் ரஷ்யா அணுகுண்டை கையில் எடுக்கக்கூடும் என ஊகங்கள் நிலவி வந்தன. ஆனால் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ரஷ்யா நிராகரித்துள்ளது.
இதுபற்றி ஐ.நா. ஆயுத குறைப்பு ஆணைய கூட்டத்தில், ஐ.நா. சபைக்கான ரஷ்யாவின் முதல் துணை பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி(Dmitry Polyansky) பேசும்போது கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், “ஊகங்களுக்கு மாறாக ரஷ்யாவின் அணுசக்தி திறனைப் பயன்படுத்துவது, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே, அவற்றுக்கு அணு ஆயுதங்களால் பதில் அளிப்பது சாத்தியம்” என குறிப்பிட்டார்.
மேலும் “இந்த அளவுகோல்கள், உக்ரைனில் தற்போது வெளிவரும் சூழ்நிலைக்கு எந்த வகையிலும் பொருந்தாது. அணுசக்தி போரில் வெற்றியாளர்கள் இருக்க முடியாது.
அணுசக்தியை கட்டவிழ்த்து விடக்கூடாது என்ற கொள்கையை ரஷ்யா உறுதியுடன் கடைப்பிடிக்கிறது” எனவும் அவர் கூறினார்.
இதனால் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என உறுதியாகிவிட்டது.