முடிவுக்கு வருகிறதா உலகின் நீண்ட நாள் ஊரடங்கு?
அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் மாகாணத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அமுலில் உள்ள ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதாவது,
டெல்டா வைரஸின் தாக்கம் காரணமாக மெல்போர்னில் கொரோனா பரவல் மிகவும் தீவிரமடைந்தது. இதன் காரணமாக அணுகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அங்கு கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் நீண்ட நாள் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது என தெரிவித்திருந்தது.
மேலும் நாட்டில் 80 சதவீத மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகு தான் நாட்டில் முழுமையான தளர்வு அறிவிக்கப்படும் என அவுஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியைச் செலுத்த பல்வேறு உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.