ஐ.எஸ்.ஐ.எஸ் மீண்டும் தாக்குதல்...வழிமறித்த அமெரிக்கா படை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை குறி வைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீண்டும் பல ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றை அமெரிக்க படையினர் வழிமறித்து அழித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாளையுடன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முடிவடைவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, எஞ்சி இருக்கும் தூதரக அதிகாரிகளையும், படையினரையும் அழைத்துச்செல்லும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இந்த நிலையில் காபுல் விமான நிலைத்தை குறி வைத்து பல ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவற்றை வழிமறித்து அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காபுல் விமான நிலையம் நோக்கி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் மீது அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.இதில் காபுல் விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தும் நோக்கில் வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.