ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்காக 100 பேருக்கு பயிற்சி அளித்த அமெரிக்கப் பெண்! வெளியான பகீர் தகவல்
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பெண்கள் படைப்பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்கப் பெண்ணொருவர், தான் குற்றவாளி என நேற்று (07) ஒப்புக்கொண்டுள்ளார்.
அலிசன் புளூக் எக்ரென் எனும் 5 பிள்ளைகள் தாயான அவர் தனது சொந்த மளுக்கும் துப்பாக்கிப் பயிற்சி அளித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். குறித்த பெண்மீது நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இராணுவப் பயிற்சி அளித்ததாகவும் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தலைநகர் வொஷிங்டன் டிசிக்கு அருகிலுள்ள வடக்கு வேர்ஜீனியாவிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று, தன் மீதான குற்றச்சாட்டை எக்ரென் நேற்று ஒப்புக்கொண்டுள்ளார் என அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்காக சிரியாவிவில் 10 அல்லது 11 வயது சிறுமி உட்பட நூற்றுக்கும் அதிகமான பெண்களும் சிறுமிகளும் புளூக் எக்ரெனிடமிரு;நது இராணுவப் பயிற்சி பெற்றுள்ளனர் என அத்திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. சிரியாவில் கைது செய்யப்பட்டிருந்த புளூக் எக்ரென், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த குற்றசாட்டினை அவர் ஒப்புக்கொண்டுளதால் புளூக்-எக்ரென் , தற்போது 20 வருடங்கள் வரையான சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார் என அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
42 வயதான அலிசன் புளூக் எக்ரென் அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் பிறந்தவர். அமெரிக்காவில் பட்டம் பெற்று பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய அவர், பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தமை குறித்து அவரின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சட்ட ஆவணங்களின்படி, 2008 ஆம் ஆண்டு எகிப்துக்கு குடிபெயர்ந்த அலிசன் புளூக் எக்ரென் 2011 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவுக்கு தானாக திரும்பிவரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு தனது அப்போதைய கணவரான ஐ.எஸ். இயக்க அங்கத்தவருடன் சிரியாவுக்கு அலிசன் புளூக் எக்ரென் சென்ற நிலையில் அவரின் கணவர் 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
சில மாதங்களின் பின் பங்களாதேஷை சேர்ந்த ஐ.எஸ். அங்கத்தவர் ஒருவரை அவர் திருமணம் செய்த நிலையில் அவரும் 2016 அல்லது 2017 இல் உயிரழந்தார்.
அதன் பின்னர் சிரியாவின் ரக்கா நகர பாதுகாப்புக்கான ஐ.எஸ். துலைவர் ஒருவரை அவர் திருமணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.