இஸ்ரேல் -ஹமாஸ் போரால் அமெரிக்காவில் வெடித்த போராட்டம்
இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் அமைப்புக்கும் போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இருதரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
தாக்குதல்களை நிறுத்தக் கோரி பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கோரி அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
300 போராட்டக்காரர்கள் கைது
ஷிங்டனில் கேனான் ரோட்குண்டா பகுதியை ஏராளமானோர் முற்றுகையிட்டு போரை நிறுத்தும்படி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி சென்றனர்.
இதையடுத்து நாடாளுமன்ற நுழை வாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிரதான நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பாதைகளுக்கு பதிலாக சுரங்கப் பாதைகளை பயன்படுத்துமாறு பாராளுமன்ற ஊழியர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சென்றதால் பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர். எனினும் அவர்கள் கலைந்து செல்லாததால் சுமார் 300 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் யூத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன், அவர்கள் போர் நிறுத்தம் கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.
மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.