ஜெனினில் இடம்பெற்ற பயங்கர கத்தி குத்து தாக்குதல்: 7 பேருக்கு நேர்ந்த நிலை
ஜெனினில் இஸ்ரேலின் மிகப்பெரிய இராணுவத் தாக்குதலின் 2அவது நாளில், டெல் அவிவில் கார் மோதி மற்றும் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய பொலிஸார் வடக்கு டெல் அவிவில் “பொதுமக்கள் பலரை தாக்கிய ஒரு கார்” பற்றிய முறைப்பாட்டை பெற்றதாகவும், சந்தேக நபர் “நடுநிலைப்படுத்தப்பட்டதாகவும்” தெரிவித்தனர்.
இந்த சம்பவ இடத்தில் அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
“சந்தேக நபர் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிச் சென்ற வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும், ஷாப்பிங் சென்டரில் நின்றிருந்த பாதசாரிகள் மீது மோதியதாகவும், பொதுமக்களை கூர்மையான பொருளால் குத்துவதற்காக வாகனத்தில் இருந்து இறங்கச் சென்றதாகவும் தெரிகிறது,” என்று காயமடைந்தவர்களில் 3 பேர் தெரிவித்தனர்.
மேலும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியை நடத்தும் பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸ், இந்தத் தாக்குதலை ஒரு “வீர நடவடிக்கை” என்று பாராட்டியது.