காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல் 9 சிறுவர்கள் உட்பட 25 பாலஸ்தீனியர்கள் பலி
முற்றுகைக்குள்ளாகியுள்ள காஸா பள்ளத்தாக்கின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதல்களில் 25க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளதை பாலஸ்தீன சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒன்பது பேர் சிறுவர்கள் என தகவல்கள்வெளியாகியுள்ளன.
மூன்;று சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெரூசலேத்தில் உள்ள அல்அக்சா மசூதி வளாகத்;திலிருந்து இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக்கொள்ளவேண்டும் என ஹமாஸ் விடுத்த காலக்கெடு முடிவடைந்த பின்னர் அந்த அமைப்பு இஸ்ரேலை நோக்கி ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
அல்அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேல் இழைத்த குற்றங்களிற்காகவே இந்த ரொக்கட் தாக்குதல் இடம்பெற்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. நேற்று அல்அக்சா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய படையினர் பலவந்தமாக வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய படையினரின் இந்த நடவடிக்கை காரணமாக 305 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.