நடுவானில் விமானத்தை மடக்கி தரையிறக்கிய விவகாரம்... கனடா எடுத்துள்ள நடவடிக்கை
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய் சொல்லி, போர் விமானங்கள் உதவியுடன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. ஞாயிற்றுக் கிழமையன்று, ஏதென்ஸிலிருந்து லிதுவேனியா நோக்கி சென்று கொண்டிருந்த Ryanair நிறுவன விமானம் ஒன்று பெலாரஸ் வான் வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று அதை அணுகியது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், உடனே அந்த விமானத்தை பெலாரஸ் நாட்டில் தரையிறக்குமாறும், மறுத்தால் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்படவே, உடனடியாக அந்த விமானம் பெலாரஸ் நாட்டின் Minsk நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
திடீரென விமானத்தை போர் விமானம் ஒன்று தரையிறக்க உத்தரவிட்டதால், விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் ஏறிய பெலாரஸ் பொலிசார், விமானத்திலிருந்த Roman Protasevich (26) என்ற இளைஞரையும் அவரது காதலியான Sofia Sapega என்ற இளம்பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
The actions of the Belarusian authorities represent what appears to be a serious violation of international law on civil aviation.
— Dominic Raab (@DominicRaab) May 24, 2021
We are now advising UK airlines to cease overflights of Belarusian airspace. pic.twitter.com/aHPZ2dc2Tz
Protasevich பெலாரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர். அவர் லிதுவேனியாவில் தலைமறைவாக இருந்தார். அவர் அந்த விமானத்தில் இருப்பதை அறிந்துகொண்டதால் இப்படி அவர் நடுவானில் மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர்களை கைது செய்வதற்காகவே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டதும் தெரியவரவே, இந்த சம்பவம் உலக நாடுகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, கனடா விமானங்கள் மற்றும் கனடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள விமானங்கள், பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு, கனடாவின் வெளியுறவு அமைச்சரான Marc Garneau மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான Omar Alghabra ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Belarusian authorities stop at nothing in persecuting dissenters. Even its airspace is unsafe now. Ukraine has always been interested in a democratic Belarus where human rights are respected. But now we prepare to cease direct flights & ban UA aircrafts from flying to or over it.
— Dmytro Kuleba (@DmytroKuleba) May 24, 2021
அத்துடன் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பெலாரஸ் அதிகாரிகள் விமானத்தை மடக்கியதும், Protasevichஐக் கைது செய்ததும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளார்.
பெலாரஸின் நடத்தை அராஜகமானது, சட்ட விரோதமானது, ஏற்றுக்கொள்ளத்தகாதது என்று கூறியுள்ள ட்ரூடோ, இது ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல் என்றும், நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம், Protasevichஐ உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், கனடாவிலுள்ள தனது தூதரகத்தை இந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி மூட பெலாரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.