அவசரகால சட்டம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகரின் டுவிட்
இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் (David McKinnon) அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
நாடு முழுவதிலும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டங்கள் நடாத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் கடந்த சில வாரங்களாக மக்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், நாட்டின் ஜனநாயகம் பாராட்டுக்குரியது எனவும் டேவிட் மெக்கின்னன் (David McKinnon) தெரிவித்துள்ளார்.
எனினும், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது தமக்கு புரியவில்லை என அவர் டுவிட்டர் பதிவு ஊடாக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.