ஐரோப்பிய பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் இத்தாலி
ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை இத்தாலி தளர்த்தியுள்ளது.
அத்துடன் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று மற்றும் தொற்றுக்குள்ளாகவில்லை என்ற சான்று காண்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளம் கண்ட இத்தாலி அவர்களை தனிமைப்படுத்தியிருந்ததுடன் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என தெரிவித்துள்ளது.
இதன் பின்னரே கொவிட் கட்டுப்பாடுகளை இத்தாலி கடுமையாக்கியது. அதேவேளை 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மிக மோசமான அளவுக்கு கொரோனா தொற்றை எதிர்கொண்ட நாடு இத்தாலி ஆகும்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அங்கு 167000றகும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 426 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.