ஜேர்மன் வெள்ளத்தில் சிக்கி யாழ்ப்பாணக் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு
அண்மையில் ஜேர்மனியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கில் சிக்கி, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டும் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
பெரும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின் euskirchen என்ற இடத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி அவர் வெள்ளத்தில் சிக்குண்டதாக தெரியவந்துள்ளது. வீட்டில் தனித்திருந்த சமயம் வெள்ளம் பெருகி வருவது கண்டு அவர் தனது முக்கிய சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்புத் தேடுவதற்காக வீட்டுக்கு வெளியே ஓடிவந்தபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணமால்போனதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளப் பகுதி ஒன்றில் இருந்து மறுநாள் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதேவேளை ஜேர்மனியில் வெள்ளம் பாதித்த மேற்குப் பகுதிகளில் பல தமிழர்களும் சிக்குண்டனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.