மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளுங்கட்சி! ஜப்பான் நாட்டில் வெளியான தேர்தல் முடிவுகள்
ஜப்பானில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது.
ஜப்பானில் கடந்த ஞாயிற்று கிழமை 465 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இது குறித்து தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு 261 இடங்கள் கிடைத்துள்ளன.
லிபரல் ஜனநாயகத்தின் கூட்டணி கட்சி 32 இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் வெற்றி மூலம் ஃபுமியோ கிஷிடா மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். கிஷிடாவின் லிபரல் ஜனநாயக கட்சி கூட்டணி சுமார் 293 இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.
பெருபான்மைக்கு 233 இடங்கள் தேவை என்ற நிலையில் அதை விட அதிகமாகவே ஆளும் கட்சி கூட்டணி பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் ஆளும் கட்சி 305 இடங்களை தன்வசமாக்கி கொண்டு ஆட்சியை அமைத்தது. ஆனால் இப்போது 15 இடங்களை இழந்தாலும் தனி பெரும்பான்மை பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றியையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் கிஷிடா முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களையே மீண்டும் நியமிக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.