தாலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
தாலிபான்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது தாலிபான்களின் ஒத்துழைப்பே பொருத்தே முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் பைடன் திடீரென அதிரடியாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க, நேட்டோ படைகள் வரும் 31ம் திகதிக்குள் திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்துள்ளார். தற்போது, தாலிபான்கள், அங்கு ஆட்சியை பிடித்துள்ளனர்.அங்கிருந்து வெளியேறி வரும் மக்களை காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க ராணுவ விமானங்கள் பாதுகாப்பாக மீட்டு வருகின்றன.
இதனிடையே, தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபைஹூல்லா முஜாகித், `அமெரிக்க படைகள் கூறிய தேதியில் வெளியேறாவிடில், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்,' என்று எச்சரித்தார். அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவ தற்கான கெடு முடிய இன் னும் 5 நாட்களே உள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில்,
``அமெரிக்க படைகள் வெளியேறும் திட்டத்தை குறித்த காலத்துக்குள் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். இதில் எந்தளவுக்கு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது பற்றி தெரியும். தலிபான்கள் உண்மையிலேயே கடும் சவாலாக இருப்பார்கள். எனவே, அவர்களின் ஒத்துழைப்பை பொருத்தே அங்கிருந்து அமெரிக்க படையினர் ஆகஸ்ட் 31ம் திகதிக்குள் வெளியேறுவது பற்றி முடிவு எடுக்க முடியும்,'' என்றார்.