இலங்கை, கனடா, பிரித்தானியா இணைந்து மேற்கொண்ட ஆய்வு: கருத்தடை மாத்திரைகளால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையலாம்
இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் மெக் கில் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் பிரித்தானியாவின் பர்மிங்காம் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள், பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவைக் குறைக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பை நீர்க்கட்டிகள் என்று அழைக்கப்படும் polycystic ovary syndrome (PCOS) என்னும் பிரச்சினை கொண்ட பெண்களில் கால்வாசிப்பேருக்கு, கருத்தடை மாத்திரைகள் இரண்டாம் வகை நீரிழிவைக் குறைக்கலாம் என பர்மிங்காம் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏன் குறிப்பாக கருப்பை நீர்க்கட்டிகள் என்னும் பிரச்சினை கொண்ட பெண்களைக் குறித்துப் பேசுகிறோம் என்றால், அவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு ஏற்படும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் என்பதால்தான். ஆகவே, அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படவேண்டியது அவசியமாகிறது.
கருப்பை நீர்க்கட்டிகள் என்னும் பிரச்சினை கொண்ட பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு ஏற்படும் அபாயத்துடன், கருப்பையுடன் தொடர்புடைய புற்றுநோய், இதய பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது .
தற்போது தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள், பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவைக் குறைக்கலாம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில், முறைப்படி நோயாளிகள் மீது இந்த பரிசோதனைகளை சோதனை முறையில் மேற்கொள்ள ஆய்வாளர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்த பரிசோதனை வெற்றிபெறுமானால், அது உலகம் முழுவதிலும் இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பெருமளவில் உதவலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.