ஆப்கானில் பத்திரிகையாளர்கள் முதுகில் காயம்; மக்கள் மத்தியில் அச்சம்
தலீபான்களால் கைது செய்யப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்கள், முதுகில் காயம் ஏற்பட்ட அடையாளங்களுடன் எடுக்கபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் , இந்த சம்பவம் ஆப்கான் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 15-ந் திகதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருவதுடன் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலரும் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.
Powerful photo by @yamphoto of the two journalists who were detained, tortured and beaten by the #Taliban yesterday in #Kabul. pic.twitter.com/UHePkBzozW
— Sharif Hassan (@MSharif1990) September 8, 2021
ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாத தலீபான்கள் இடைக்கால மந்திரிசபையையும் , இடைக்கால பிரதமரையும் தலீபான்கள் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் தலிபான்கள் முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும், கொலை செய்தும் வருகின்றனர்.
அதன்படி இடைக்கால அரசின் பிரமரை அறிவித்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தலீபான்கள் கைது செய்த நிலையில் அவர்களில் இருவரின் முதுகில் காயம் ஏற்பட்ட அடையாளங்களுடன் எடுக்கபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தலீபான்கள் ஆட்சியில் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சம் அங்குள்ள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.