கனேடிய நகரமொன்றின் மேயராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி பெண்மணி
ஆல்பர்ட்டாவின் கல்கரி நகரின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றுள்ளார் இந்திய வம்சாவளி Jyoti Gondek.
கோண்டேக் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்பு மூன்றாவது வார்டுக்கு ஒரு முறை கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பதவியேற்பு விழாவில் கல்கரி நகரில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 13 கவுன்சிலர்களுடன் கோண்டேக் பதவியேற்றுக்கொண்டார்.
கலகரி நகர வரலாற்றில் முதல் பெண் மேயர் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், கவுன்சில் உறுப்பினர்களாக 9 புதுமுகங்களும் 2 பேர் கவுன்சிலர்களாகவும் தெரிவாகியுள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிரித்தானிய தலைநகர் லண்டனில் பிறந்தவர் ஜோதி கோண்டேக். 1970 காலகட்டத்தில் ஜோதி கோண்டேக் பெற்றோர் கனடாவுக்கு குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.