தலிபான்களின் கட்டுப்பாட்டில் காபூல் நிலைமை சீராக உள்ளது; பாராட்டும் ரக்ஷ்யா
ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டில் நிலமை சிறப்பாக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
ஆப்கனிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ் (Dmitry Zhirnov) திங்களன்று எக்கோ மாஸ்க்வி வானொலியில் நேரடி ஒளிபரப்பில் பேசினார்.
இதன்போது, 'ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், அதிபர் அஷ்ரப் கனியின் (Ashraf Gani) ஆட்சியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிலைமை சிறப்பாக இருந்ததாக அவர் கூறினார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், தலிபான்களின் கீழ் உள்ள முதல்நாளிலேயே என்னாலும் இதனைக் கூற முடியும். அஷ்ரப் கனியின் கீழ் இருந்ததை விட தலிபான் பயங்கரவாதிகளின் கீழ் காபூல் நிலைமை சிறப்பாக உள்ளது.
காபூலில் நிலைமை அமைதியானது. தலிபான் பிரிவுகள் தலைநகருக்குள் நுழைந்து, ஆப்கன் அரசையும் அமெரிக்கப் படைகளையும் நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டதனால் அஷ்ரப் கனி தப்பித்துச் சென்றுவிட்டார். இது இழிவான செயல்.
அத்துடன் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஷி ய தூதரகம் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷிய அதிகாரிகளை மீட்பது குறித்து செவ்வாய்க்கிழமை தலிபான்களுடன் விரிவான பாதுகாப்புப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன்.
முந்தைய ஒப்பந்தங்களின்படி, ரஷிய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர் எனவும் ஆப்கனிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ் (Dmitry Zhirnov)தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.