இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணம்! மோப்பநாயால் சிக்கியுள்ள இராணுவ வீரர்
கண்டி - அலவத்துகொடை இளம் பெண் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் வயல் பகுதியில் புதைந்திருந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தேகநபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார், பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.
தொடரும் விசாரணை
சம்பவம் தொடர்பில் கைதான 38 வயதுடைய சந்தேகநபர் முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்ததால் சிகிச்சைக்கு பின் தற்போது இராணுவத்தில் சாதாரண கடமைகளில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 வயதுடைய பெண்ணொருவரின் சடலம், வீட்டுக்கு அருகிலுள்ள வயல் பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து கிராம மக்களால் கடந்த சனிக்கிழமை (11.03.2023) மீட்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.