கடத்தப்பட்டு இளம் பெண் சீரழிப்பு: சமூக ஊடகத்தால் ஏற்பட்ட துயரம்
ஒன்ராறியோவில் இளம் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் லண்டன் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தொடர்புடைய இளம் பெண் கடந்த ஆண்டு சமூக ஊடக செயலி ஒன்றின் மூலம் அடிக்கடி ஒருவருடன் பேசி வந்துள்ளார். அந்த நபர் தம்மை 14 வயது சிறுவன் என்றே அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனால் குறித்த இளம் பெண்ணும் அச்சமின்றி நட்பு பாராட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ள முடிவு செய்து, வணிக வளாகம் ஒன்றை தெரிவு செய்து முடிவு செய்தனர்.
ஆனால் சம்பவத்தன்று, குறிப்பிட்ட வணிக வளாகத்தின் வெளியே காத்திருந்த இளம் பெண்ணை, வாகனத்தில் வந்த ஒருவர், ஆயுதம் காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, இன்னொரு பகுதிக்கு கொண்டு சென்று சீரழித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் பொலிசாருக்கு புகாராக தெரிவிக்கப்பட விசாரணை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை 47 வயதான அந்த நபரை லண்டன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
லண்டனை சேர்ந்த அவர் மீது கடத்தல், துஸ்பிரயோகம் உட்பட 10 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நபரால் இதே போன்று சமூக ஊடகம் வாயிலாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரை நாடி புகாரளிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.