வெளிநாடொன்றில் கனேடியர் ஒருவரை கடத்திய கடத்தல் கும்பல்!
ஹெய்தியில் அமெரிக்க மிஷனெரிகளின் குடும்பங்களைக் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகிவந்த நிலையில், அவர்களில் ஒரு கனேடியரும் கடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
400 Mawozo gang என்று அழைக்கப்படும் கும்பலே 16 அமெரிக்க கிறிஸ்தவ மிஷனெரிகள், (Christian Aid Ministries) கனேடிய குடிமகன் ஒருவர் மற்றும் பல சிறுபிள்ளைகளை கடத்திச் சென்றுள்ளது.
கிறிஸ்தவ மிஷனெரிகள் சிலரை விமான நிலையத்திற்கு அனுப்புவதற்காக பேருந்து சென்றபோது, Ganthier என்ற இடத்தில் வைத்து குறித்த பேருந்தை கடத்தியுள்ளனர்.
இந்த கடத்தப்பட்ட கனேடியரை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், கடத்தப்பட்ட நபரின் பெயர் விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.