அமெரிக்கா- தென்கொரியாவிற்கு கிம் சகோதரி விடுத்த எச்சரிக்கை
தென் கொரியாவும், அமெரிக்காவும் இந்த வாரம் தொடங்கும் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இன்னும் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா ஜனாதிபதி கிம்மின் சகோதரி கிம் யோ யொங் (Yoo Yong) எச்சரித்துள்ளார்.
தென் கொரியாவும், அமெரிக்காவும் செவ்வாய்க்கிழமை ஆரம்ப இராணுவ பயிற்சிகளைத் தொடங்கும் என யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்தது.
இந் நிலையில் இந்த பயிற்சிகள் வட கொரிய மக்களை அச்சுறுத்தும் மற்றும் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் "விரும்பத்தகாத, சுய அழிவு நடவடிக்கை" என்று கிம் யோ யொங் (Yoo Yong) கொரிய மத்திய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் தென் கொரியா எங்கள் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை புறக்கணிப்பதன் மூலம் மிகவும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.