ஆஸ்திரேலியா பிலோலா நகரில் கோபிகா - தர்ணிகாவின் முதல் மகிழ்ச்சியான நாள்!
இலங்கையை சேர்ந்த பிரியா- நடேசலிங்கம் தமிழ் குடும்பத்திற்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு முன்பு வாழ்ந்த ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தொழிற்கட்சி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்த நிலையில், அவர்களுக்கு இந்த மகிச்சியான தகவல் கிடைத்தது.
இந்த சூழலில், பிரியா- நடேசலிங்கத்தின் குழந்தைகளான கோபிகா மற்றும் தர்ணிகா பிலோலா நகரில் முதல் நாள் பாடசாலைக்கு சென்று வந்துள்ளனர்.
“எங்களது குழந்தைகள் பிலோலாவில் அமைதியாக குடியமர்ந்து கல்வியைப் பெற வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளில் பிரியாவும் நடேசும் பல முறை கூறியிருந்தனர். அது இன்று நடந்திருக்கிறது,” என Bring Priya, Nades and their girls home to Biloela என்ற குழு பதிவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் மிக கடுமையான கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக சுமார் 4 ஆண்டுகள் தடுப்பு முகாமில் சிறைப்பட்டிருக்க வேண்டிய நிலை பிரியா- நடேசலிங்கம் ஏற்பட்ட்டிருந்ததுடன் , பல்வேறு கஸ்ரங்களுக்கும் அவர் முகம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.