ஹரியானா அரசால் 54 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பப்பெறபட்ட சட்டம்
ஆர்எஸ்எஸ் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி போன்ற அமைப்புகளில் சேர்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை சட்டத்தை 54 ஆண்டுகளுக்கு பிறகு ஹரியானா அரசு திரும்ப பெற்றுள்ளது.
இந்த தடை சட்டமானது இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது 1966ஆம் ஆண்டு அரசு ஊழியர்களின் நடத்தை சட்டத்தின்படி ,அரசு ஊழியர்கள் கட்சி அல்லது அமைப்புகளில் சேருவதற்கான தடை அமலுக்கு வந்தது.
அதன் பிறகு 1975ல் இந்த சட்டம் நீக்கப்பட்டு அடுத்து ஐந்து ஆண்டுகளில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. 1964ன் மத்திய அரசு ஊழியர்களின் சட்டத்தின் படி அரசு ஊழியர்கள் எவரும் அரசியல் கட்சியிலோ அதன் அமைப்பிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதனை மீறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 1980ல் மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்ட இதே சட்டத்தை தற்போது ஹரியானா அரசு 54 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப பெற்றது.
இது குறித்து தலைமை செயலாளர் விஜய் வர்தன் எழுதிய கடிதத்தில்,
"ஹரியானா அரசு ஊழியர்களின் நடத்தை சட்டத்தின் 2016ன் படி அரசு ஊழியர்கள் எவரும் அரசியல் கட்சியிலோ, அதன் கூட்டத்திலோ மற்றும் ஆர் எஸ்எஸ், ஜமார் இ இஸ்லாமி போன்ற அமைப்புகளில் சேர்வதற்கோ தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பில் கடந்த காலகட்டங்களில் வெளியான அரசாணைகள் அனைத்தும் தற்போதைய சூழலுக்கு பொருத்தமற்றதாக இருந்ததால் அவை அனைத்தும் திரும்ப பெறப்பட்டன."
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.