கனடாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் பிரதமர் ட்ரூடோ: பொய்யாகும் கருத்துக்கணிப்புகள்
கனடா பொது தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கே வெற்றி என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை லிபரல் கட்சி வெல்லுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வரும்.
கனடாவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவா் ஆட்சியமைத்துள்ளாா்.
இதனிடையே, 2023ம் ஆண்டு அடுத்த தோ்தல் நடைபெறவேண்டிய நிலையில், முன்கூட்டியே தோ்தல் அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே லேசான சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும் அரசியல் கட்சிகளிடையே அனல் பறக்கும் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டது. ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், கன்சா்வேடிவ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வாக்குப் பதிவு திங்கள்கிழமை தொடங்கி தற்போது முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தொடக்கத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகவும், கன்சா்வேடிவ் கட்சி சாா்பில் பிரதமா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எரின் ஓ டூலிக்கும் சாதகமாகவும் இருந்தது.
இந்த நிலையில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே வேளை லிபரல் கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்லுமா என்பதில் சந்தேகம் இருந்து வருகிறது.