ஈபிள் டவரை தாக்கிய மின்னல்; இருளில் மூழ்கிய நகரங்கள்
பிரான்சில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் இருளில் மூழ்கின. மோசமான வானிலை காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
பாரீஸ், Rouen நகர சாலைகள் வெள்ளக் காடாக காட்சி அளித்தது. இநிலையில் மின்னல் தாக்கியதில் 15ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. ஈபிள் டவர் மீது மின்னல் தாக்கியதாகவும் பெரிய அளவில் சேதம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வெள்ளம் சூழும் பகுதிகளில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Impact de foudre sur la tour Eiffel cet après vers 18h pendant le scintillement :) Pris simultanément avec 2 appareils. #meteoparis #keraunos #mairiedeparis #weather #toureiffel #meteoville #paris #france #lejournaldelameteo #meteofrance #weather_channel #lachainemeteo pic.twitter.com/gQxF80EPKe
— Kulik Bertrand (@ptrenard) June 4, 2022
ஈஃபிள் கோபுரத்தின் மீது குறைந்தது வருடத்துக்கு ஐந்து தடவைகளாவது மின்னல் தாக்குதல் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பார்வையாளர்கள் ஈஃபிள் கோபுரத்தில் இருக்கும் போது மின்னல் தாக்கினால் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.