அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட பாடசாலை மீள திறக்கப்பட்டது
அஜாக்ஸில் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட பாடசாலை மீளவும் திறக்கப்பட்டுள்ளது.
அஜாக்ஸில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளியொன்று நேற்றைய தினம் முடக்க நிலையை அறிவித்தது.
இணைய வழியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை தொடர்ந்து இவ்வாறு முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.
அஜாக்ஸின் ஹார்வுட் அவன்யூவில் அமைந்துள்ள நோர்ட் டேம் கத்தோலிக்கப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை நிர்வாகம், முடக்க நிலை அறிவிக்கத் தீர்மானித்தது. முன் எச்சரிக்கை அடிப்படையில் குறித்த பாடசாலையில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டது என டர்ஹம் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அச்சுறுத்தல்கள் கிடையாது என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலை முடக்க நிலை நீக்கப்பட்டது என டர்ஹம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.