லண்டன் தூதரகத்தை முற்றுக்கையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! 5 பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையில்
லண்டனில் உள்ள ஈரானிய தூதரகத்தை முற்றுக்கையிட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
லண்டனில் ஈரானிய தூதரகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், நூற்றுக்கணக்கானோர் வெஸ்ட்மின்ஸ்டரில் அமைந்துள்ள ஈரானிய தூதரகத்தை நேற்று முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டகாரகள் போத்தல்கள் உள்ளிட்டவையை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அதிகாரிகள் பலர் காயம்பட்டதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட 12 பேர் கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து போராட்டம் நடந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரிவு 35 உத்தரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தூதரக முற்றுகையானது ஈரானில் தொடரும் போராட்டங்களின் எதிரொலி என்றே தெரியவந்துள்ளது.
22 வயது மஹ்ஸா அமினி கைது
ஈரானில் ஹிஜாப் தொடர்பாக அமுலில் இருக்கும் விதிகளை பின்பற்றாததை குறிப்பிட்டு 22 வயது மஹ்ஸா அமினி கைது செய்யப்பட்டு பொலிஸார் மேற்கொண்ட கடும் விசாரணைக்கு பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்று, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இச்சம்பவம் ஈரான் மொத்தமும் கொந்தளிக்கவைத்த நிலையில்,பெண்கள் தங்கள் ஹிஜாப் உடைகளை பொதுவெளியில் வைத்து தீவைத்து கொளுத்தியதுடன், தலைமுடியை துண்டித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.