சாலையில் குற்றுயிராக மீட்கப்பட்ட இளைஞர்: பொலிஸ் விசாரணையில் முக்கிய திருப்பம்
ரொறன்ரோவின் Long Branch சந்திப்பில் குற்றுயிராக மீட்கப்பட்ட இளைஞர் விவகாரத்தில் பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ரொறன்ரோ பகுதியில் வசித்து வந்த 23 வயதான Adrian Hurley என்பவரே, குற்றுயிராக மீட்கப்பட்ட நபர் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை சுமார் 6 மணியளவில் குறித்த நபரை பொலிசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவசர மருத்துவ ஊழியர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு விரைந்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிய வந்தது.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் தெரிவித்திருந்த பொலிசார், சனிக்கிழமை மதியத்திற்கு மேல் வெளியிட்ட அறிக்கையில், Adrian Hurley துப்பாக்கி குண்டு காயங்களால் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் இந்த ஆண்டில் மட்டும் Adrian Hurley உட்பட படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 என பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.