கனடாவில் ஒரு மில்லியன் டாலர்களை இழக்கப் போகும் துரதிஸ்டசாலி யார்
கனடாவில் நபர் ஒருவர் ஒரு மில்லியன் டாலர்களை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு மில்லியன் டாலர்களை வென்ற நபர் ஒருவர் இதுவரையில் பரிசை பெற்றுக்கொள்ளவில்லை.
றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டை கொள்வனவு செய்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் திகதி நடைபெபற்ற சீட்டிலுப்பில் இந்த பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
01 – 18 – 22 – 31 – 32 – 40 – 43 என்ற இலக்கத்தினைக் கெகாண்ட லொத்தர் சீட்டிற்கு இவ்வாறு பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுத்த வெற்றியாளர் ஒரு ஆண்டுக்குள் தனது பரிசினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓராண்டின் பின்னர் பரிசு கிடைக்கப் பெற்ற லொத்தர் சீட்டு காலாவதியாகின்றது.
இதன்படி, இரண்டு வாரங்களுக்குள் பரிசினை பெற்றுக்கொள்ள வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் பரிசில் தொகையை பெற்றுக்கொள்ள முடியாது.
காணாமல் போதல் அல்லது மறதி காரணமாக இவ்வாறு பரிசுத் தொகைகள் பெற்றுக் கொள்ளப்படாத சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக லொத்தர் சீட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் டோனி பிட்டோனி தெரிவித்துள்ளார்.