அமேசான் காட்டுப்பகுதியில் மாயமான பிரேசில் ஊடகவியலாளர்கள்
அமேசான் மழைக்காடுகளின் தொலைதூரப் பகுதியில் பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரும் பிரேசிலைச் சேர்ந்த பூர்வீக நிபுணர் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரேசிலில் உள்ள கார்டியன் செய்தித்தாளில் தொடர்ந்து பங்களிப்பவர் டோம் பிலிப்ஸ். இவர் வார இறுதியில் அமேசானாஸ் மாநிலத்தின் ஜாவாரி பகுதியில் கடைசியாக காணப்பட்டார். அவர் ஒரு புத்தகத்தை ஆராய்ச்சி செய்யும் போது புருனோ பெரேராவுடன் அந்தப் பகுதியில் பயணம் செய்தார். சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் மிரட்டல் வந்ததாக பழங்குடியினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் மாயமான இருவரையும் மத்திய போலீசார் மற்றும் கடற்படையினர் தேடி வருகின்றனர். குறித்த ஊடகவியலாளர்கள் திங்கள்கிழமை மாலை காணாமல் போனது தொடர்பாக இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக பிரேசிலிய செய்தித்தாள் ஓ குளோபோ தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காணமல்போனவர்களில் 57 வயதுடைய பிலிப்ஸ் என்பவர் அமேசானைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரேசிலில் வசித்து வருகிறார். இதேவேளை பெரேரா என்பவர், அமேசானில் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பற்றிய நிபுணர். ஒரு வாரமாக மாவட்டத்தில் இருந்த இருவரும் வெள்ளிக்கிழமை ஜபுரு ஏரிக்கு படகில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அட்டாலியா டோ நோர்டே நகருக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர்கள் வரவே இல்லை.
இந்நிலையில் இருவரும் காணாமல் போனதையடுத்து குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.