ஐநா சபையில் பாகிஸ்தானின் மீது கடும் கண்டனம் பதிவு செய்த முக்கிய நாடு
பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் தந்து, நிதியுதவி அளித்து இந்தியாவுக்கு எதிராக சதிகளை அரங்கேற்றுவதாக இந்தியா கடும் கண்டனத்தை ஐநா.சபையில் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்று பொய்யான தகவல்களை பாகிஸ்தான் அளித்துள்ளது.
பாகிஸ்தானின் ஐநா.பிரதிநிதிக்கு பதிலடி கொடுத்த ஐநா.சபைக்கான நிரந்தர இந்தியக் குழுவின் ஆலோசகர் ஆர்.மதுசூதன், தீவிரவாதத்துடன் தொடர்புடைய பாகிஸ்தான் வரலாறு குறித்து விவரித்தார்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீரிள் ஆக்ரமிப்பு பகுதிகளை விட்டு உடனடியாக பாகிஸ்தான் ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் இந்தியா ஐநா.சபையில் வலியுறுத்தியுள்ளது.