ஏரி வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த கனேடியர்: பொலிசாரைக் கண்டதும் செய்த எதிர்பாராத செயல்
கனேடியர் ஒருவர் படகுப்போட்டியில் பயன்படுத்தும் படகு ஒன்றின் உதவியுடன் அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளார்.
ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அமைந்துள்ள ஏரி ஒன்றில், ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு ஒன்றை செலுத்திக்கொண்டிருக்கும்போது கனேடிய பொலிசார் கண்ணில் சிக்கியுள்ளார்.
உடனே அவர்கள், ஒருவர் அமெரிக்க எல்லையைக் கடக்க முயல்வதாக அமெரிக்க பொலிசாரை எச்சரித்துள்ளனர். அமெரிக்க பொலிசார் அவரைத் தேட, மறுநாள், எல்லையிலிருந்து அரை கிலோமீற்றர் தொலைவில் அவரையும் அவரது படகையும் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிசார் ஒருவர் அவரை நெருங்க, சட்டென துப்பாக்கி ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியுள்ளார் அவர். சுமார் எட்டு கிலோமீற்றர் தூரம் அவரைது துரத்திச் சென்று பிடித்திருக்கிறார் அந்த பொலிசார்.
கைது செய்யப்பட்ட அந்த கனேடியர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் மீது அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தது மற்றும் தடை செய்யப்பட்ட
ஆயுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.