கனடாவின் ஆரம்ப பள்ளி பூங்கா ஒன்றில் முகம் சுழிக்க வைத்த நபர்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆரம்ப பள்ளி பூங்கா ஒன்றில் நபர் ஒருவர் முகம் சுழிக்க வைத்த விவகாரத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிச்மண்ட் பகுதியில் அமைந்துள்ள McKay ஆரம்ப பள்ளி வளாகத்தின் வெளியே திங்களன்று குறித்த சம்பவம் நடந்துள்ளது. முகம் சுழிக்கும்படி நடந்துள்ள சம்பவத்தை அப்பகுதி நபர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
குறித்த நபர் பூங்காவில் குழந்தைகளுடன் பேசுவதையும் முன்பு பார்த்ததாக அருகில் இருந்தவர் கூறியுள்ளார். அந்த நபர் அருவருப்பாக நடந்து கொண்ட நேரம், அந்த வளாகத்தில் மாணவர்கள் எவரேனும் இருந்துள்ளார்களா என்பது உறுதி செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் பள்ளி அதிகாரிகளிடம் புதன்கிழமை புகாரளித்ததாகவும், குறித்த தகவல் காவல்துறைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை குறித்த நபரை அடையாளம் கண்டதுடன், அன்று மாலை நேரம் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.