மிஸ்ஸிசாகுவா துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மிஸ்ஸிசாகுவா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டானியா வீதி மற்றும் கிளென் எரின் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் குறித்த இடத்திற்கு சென்று துப்பாக்கிச் சூடு நடாத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் பற்றிய தகவல்களை திரட்டி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.