பொலிசார் கண் முன்னே குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்த நபர்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பொலிசார் கண் முன்னே, குடியிருப்பின் மாடியில் இருந்து ஒருவர் குதித்து மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Coquitlam பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. சுமார் 3.30 மணியளவில், கூச்சல் குழப்பமாக இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ள நிலையில், சம்பவப்பகுதிக்கு விசாரணையின் ஒருபகுதியாக பொலிசார் சென்றுள்ளனர்.
ஆனால் பொலிசாரின் கண் முன்னே தொடர்புடைய நபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவயிடத்திலேயே அந்த நபர் இறந்துள்ளதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
ஆனால் இச்சம்பவம் பொலிசாரின் கவனக் குறைவால் நிகழ்ந்ததா அல்லது பொலிசார் தூண்டியதால் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் என சிறப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.