அழகான குடும்பம்... 10 நிமிடங்களில் சிதைத்த கொடூரன்: கனடாவை உலுக்கிய சம்பவம்
ஒன்ராறியோவின் ஒஷாவா நகரில் உறவை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் பெண்ணை அடித்தே கொன்றுள்ளதுடன், அவரின் இரு பிள்ளைகளையும் கொடூரமாக கொன்றுள்ளார் ஒருவர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 33 வயது கோரி ஃபென், தாம் குற்றவாளி அல்ல என்றே நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். கடந்த 2018, மார்ச் 14ம் திகதி தமது குடியிருப்பின் வாகனம் நிறுத்துமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டார் 39 வயதான Krassimira Pejcinovski.
இவரது படுக்கையறையில் 15 வயது மகன் ராய் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வீட்டின் கீழ்தளத்தில் கத்தியால் மார்பில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார் 13 வயதேயான மகள் வெனிலியா.
இந்த மூன்று கொலையும் மிகவும் கொடூரமாக அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், கொல்ல வேண்டும் என கருதியே நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் கிரவுன் சட்டத்தரணி மைக் நியூவெல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது தரப்பு வாதத்தை முன்வைக்க சட்டத்தரணிகள் எவரையும் வைத்துக்கொள்ளாத ஃபென், தம்மை ஒரு இறையாண்மையின் அரசர் என்றே நீதிமன்றத்தில் கூறி வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று வேறு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஃபென் அதிகமாக கொக்கொயின் பயன்படுத்தியிருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், ஃபென் மற்றும் இவரது காதலியான Pejcinovski-ம் இணைந்தே பலமுறை கொக்கொயின் பயன்படுத்தி வந்துள்ளதை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தன்று தமது தாயார் கொக்கொயின் பயன்படுத்தியிருந்தது தொடர்பில் தாம் சண்டையிட்டதாகவும் Pejcinovski-ன் மகள் விக்டோரியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அன்றிரவு சுமார் 9.30 மணியளவில் விக்டோரியா அவரது தந்தையின் குடியிருப்புக்கு புறப்பட்டு சென்றதன் பின்னரே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. அடுத்த நாள் பகல் பலமுறை தமது தாயாரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போகவே, தமது சகோதரியை தொடர்பு கொண்டு தாயார் குறித்து விசாரிக்க கோரியுள்ளார் விக்டோரியா.
இந்த நிலையில் பகல் 10.38 மணிக்கு குடியிருப்பு திரும்பிய வெனிலியா, துரதிர்ஷ்டவசமாக ஃபென் இடம் சிக்கியுள்ளார். வெனிலியாவின் கண்களை கட்டி வெண்ணை வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு படுக்கைக்கு அடியில் சடலத்தை மறைவு செய்துள்ளார் ஃபென்.
இந்த நிலையில், விக்டோரியா அளித்த தகவலின் அடிப்படையிலேயே பொலிசார் விசாரணையை முன்னெடுத்து, சடலங்களையும் கைப்பற்றியுள்ளனர்.