நள்ளிரவில் கொல்லப்பட்டவர் இவர்தான்: புகைப்படம் வெளியிட்ட ரொறன்ரோ பொலிசார்
நார்த் யார்க்கில் சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 27 வயதான நபரை ரொறன்ரோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் ஷெப்பர்ட் அவென்யூவுக்கு அருகிலுள்ள கீலே தெருவில் உள்ள ஒரு பிளாசாவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், வாகனம் ஒன்றில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இளைஞர் ஒருவரை மீட்டுள்ளனர்.
ஆனால், சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த இளைஞர் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த Randy Nguyen என்பது தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலையில் நேரடி சாட்சிகளை மட்டுமே தேடி வருவதாகவும், அப்பகுதியில் என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.