பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்றைய தினம் அதிகாலை 5.35 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேட்ரன்ஸ் மற்றும் வேன்லஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
வாகனத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் ஒருவர் தொடர்புபட்டிருக்கின்றாரா அல்லது பலர் தொடர்பு கொண்டுள்ளனரா என்பது இன்னும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.