அரசு மருத்துவமனையில் மாமன் மகளுக்கு தாலி கட்டிய நபர்: உருக வைக்கும் காரணம்
இந்தியாவின் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயின் ஆசையை நிறைவேற்ற அரசு மருத்துவமனையில் நபர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் விழுப்புரம் திருக்காமு நகரை சேர்ந்தவர் தயாளன், (வயது 40). இவர் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது தாய் முத்தாலம்மாளுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது மகனுக்கு திருமணம் செய்து அழகு பார்க்கமுடியில்லையே என வருந்தியுள்ளார்.
இதை அறிந்த தயாளன் தனது தாயை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்த தாய் மாமன் மகள் காயத்திரி (30) என்பவரை உறவினர்கள் மத்தியில் பேசி திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதனையடுத்து மருத்துவமனையில் வாசலில் இருக்கும் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
எனினும் இதனை முத்தாலம்மாள் பார்க்கவில்லையே என்ற வருத்தம் தயாளனுக்கு இருந்தது, கொரோனா வார்டில் இருப்பதால் தாயிடம் ஆசிர்வாதமும் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார் தயாளன்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.