நடு வீதியில் தீப்பிடித்து உயிருக்கு போராடிய நபரால் பரபரப்பு
ஒன்ராறியோவின் லண்டனில் தீப்பிடித்து உயிருக்கு போராடிய நபரை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நபர் சிகிச்சையில் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் ஜாக்குலின் வீதிக்கு அருகிலுள்ள தாம்சன் சாலைக்கு சனிக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
பல நபர்கள் சம்பந்தப்பட்ட வாக்குவாதம் நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசாருக்கு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது.
தீப்பிடித்த நிலையில் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், அந்த நபரை மீட்டதுடன், அவசர மருத்துவ உதவிக் குழுவினரின் உதவியுடன் அந்த நபரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
படுகாயமடைந்துள்ள அந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், பொதுமக்களுக்கு தற்போது அப்பகுதியில் அச்சுறுத்தல் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.