ஆசை வார்த்தை கூறி 12 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர்
ரொறன்ரோவில் காரில் இருந்த ஒருவர் 12 வயது சிறுமியைப் பின்தொடர்ந்து, ஆசை வார்த்தை கூறி அவரை கடத்த முயன்ற சம்பவத்தில் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு யார்க்கில் வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 2.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் அளித்த புகரின் அடிப்படையில் ஞாயிறன்று ரொறன்ரோ பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாரிங்டன் அவென்யூ மற்றும் பால்ஃபோர் அவென்யூ பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஐயப்பாடான சம்பவம் இதுவென குறிப்பிட்டுள்ள பொலிசார், சம்பவத்தின் போது குறித்த சிறுமி நடந்து சென்றுள்ளதாகவும், அவரை பின்தொடர்ந்து வந்த கருப்பு நிற இறக்குமதி செய்யப்பட்டதாக கருதப்படும் அந்த வாகனத்தில் இருந்த நபர் ஆசை வார்த்தை கூறி தம்முடன் வர கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனால் பயந்து போன 12 வயதேயான சிறுமி, அங்கிருந்து தப்பி ஓடியதுடன், பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
ரொறன்ரோ பொலிசார் தற்போது கண்காணிப்பு கெமராவில் சிக்கிய புகைப்படங்களை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.