இரவில் தூங்கச் சென்ற கணவர் காலையில் கண் விழிக்கவில்லை... கொரோனாவை சீரியஸாக எடுத்துக்கொள்ள வலியுறுத்தும் கனேடிய பெண்
இரவில் வழக்கமாக தூங்கப்போகும்போது, நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறிவிட்டு செல்லும் ஒரு மனைவி, அன்று ஒரு நாள் அதைச் சொல்லாமல் சென்றுவிட்ட நிலையில், காலையில் கணவர் உயிருடன் இல்லை என்பது தெரியவர அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
உண்மையில், Reid Hance, அவரது மனைவி Melissa மற்றும் இரண்டு மகன்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, Tsawwassenஇல் உள்ள தங்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர் அனைவரும்.
ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி, Reidக்கு இருமல் அதிகரித்ததுடன், வழக்கத்துக்கு மாறாக நடந்துகொண்டுள்ளார் அவர். ஆகவே, மறுநாள் மருத்துவமனைக்குச் செல்ல அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுக்கொண்டு, இரவு தூங்கச்செல்லும் முன் கணவருக்கு குட் நைட் சொல்லிவிட்டு தூங்கச் சென்றிருக்கிறார் Melissa.
மறு நாள் காலை, கணவனின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு குட் மார்னிங் சொல்லியிருக்கிறார் Melissa. ஆனால், Reid அசையவேயில்ல, கணவனை அசைத்துப் பார்க்க, அவர் கண் திறக்கவேயில்லை.
கணவனின் உடல் முழுவதும் ஜில்லிட்டுப்போயிருப்பதை உணர்ந்து அதிர்ந்துபோயிருக்கிறார் Melissa. இரவில் வழக்கமாக தூங்கப்போகும்போது, நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறிவிட்டு செல்லும் அன்று மட்டும் அதைச் சொல்லாமலே சென்று விட்ட நிலையில், கணவன் உயிருடன் இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை Melissaவால்.
இனிய முகத்துடன், மற்றவர்களை சிரிக்கவைத்தபடி வலம் வந்த தன் கணவன் இப்போது இல்லை என்பதைச் சொல்லி, அஜாக்கிரதையாக இருக்கும் மற்றவர்களை கொரோனாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்துகிறார் Melissa.