கனடாவின் இந்தப் பகுதியில் அவசர நிலை அறிவிப்பு
மெனிடோபா மாகாண அரசு, வனப்பகுதிகளில் கட்டுப்பாடின்றி பரவும் காட்டுத்தீ காரணமாக அவசர நிலையை அறிவித்துள்ளது.
மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள பல பழங்குடியின சமூகங்கள் உட்பட 17,000 பேர் வெளியேற்றப்பட உள்ளனர். மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இது ஒரு முக்கியமான நடவடிக்கை” என மாகாண முதல்வர் வாப் கினியூ தெரிவித்தார்.
வெளியேற்றப்படும் பெரும்பாலானவர்கள் விணிபெக் நகருக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும், மக்கள் செஞ்சிலுவை அமைப்பில் பதிவு செய்து அவசர உதவிகளைப் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களை, முடிந்தவரை உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் தங்கும்படி அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிலின் பொலன் Flin Flon நகரம் இன்று நள்ளிரவுக்குள் முழுவதும் காலியாக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயின் பரவல் தற்போது 20,000 ஹெக்டேர்கள் வரை உள்ளதாக கூறப்படுகிறது.