கனடாவிலேயே இந்த மாகாணத்தில்தான் கொரோனா பரவல் வீதம் அதிகமாம்
கனடாவிலேயே மனித்தோபா மாகாணத்தில்தான் கொரோனா பரவல் வீதம் அதிகம் என தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஏழு நாட்களுக்கு 100,000 பேரில் 33.1 பேர் சராசரியாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
கடந்த வார இறுதியில் மட்டுமே, மனித்தோபாவில் 964 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் வின்னிபெக்கைச் சேர்ந்தவர்கள். மனித்தோபா சுகாதாரத்துறை அதிகாரிகள், அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
வாரம் ஒன்றிற்கு 20 சதவிகிதம் அளவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனவாம். இப்படிப்பட்ட ஒரு சூழலில், மனித்தோபா மாகாணம், 12 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடிவு செய்துள்ளது.
அதனாலாவது கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை குறையும் என அம்மாகாண அதிகாரிகள் நம்புகிறார்கள்.
மேலும், இன்னும் இரண்டு வாரங்களுக்காவது அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதின்படி, உடற்பயிற்சிக்கூடங்களுக்கு அனுமதி இல்லை, உணவகங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் பள்ளிகளுக்கு இணையம் வாயிலாக மட்டுமே கற்பிக்க அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Manitoba now sits at the highest rate of COVID-19 infections in all of Canada, at 33.1 cases per 100,000 people. Not a ‘first place’ to celebrate.
— Abigail Turner (@turnerrAbigail) May 17, 2021