பிரித்தானியாவில் பலர் ஏழையாகி விட்டனர்; உயர்அதிகாரி தெரிவிப்பு!
பிரித்தானியாவில் பலர் ஏழையாகி விட்டதாக அந்நாட்டு நிதித்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வருமானம் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு
மக்களின் வருமானத்தை விட செலவுகள் இரு மடங்காகி விட்டதாக நிதியமைச்சகத்தின் வரவு, செலவு நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் பிரித்தானியாவில் மக்கள் பொருளாதாரத்தத்தில் பெரும் பாதிப்புக்குளானார்கள்.
இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் பேரின் தொடர்ச்சியாக பிரிட்டன் பெரும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. இதன் காரணமாக பிரிட்டனில் 41 ஆண்டுளில் இல்லாத அளவு பணம் வீக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
தற்போது பிரிட்டனில் பொருளாதார நிலை மோசமாக நிலையே நிலவி வரும் நிலையில் பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும் மந்த நிலையை தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரித்தானிய வங்கி ஆளுநர் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.