கராத்தே பயிற்றுவிப்பாளரால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!
மராட்டியத்தில் 11 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்தவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் கன்ஹானில் விவேகானந்த் நகரில் வசிக்கும் 40 வயதான கோபால் என்பது தெரியவந்தது.
இவர், கடந்த வியாழன் (02-06-2022) அன்று அதிகாலை 4.30 மணியளவில் கராத்தே வகுப்பு என்று கூறி 11 வயது சிறுமியை ஜபல்பூர் சர்வீஸ் சாலைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியாக கராத்தே ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.