மாஸ்க் அணிவதை மொத்தமாக விலக்கிய கடைசி கனேடிய மாகாணம்
கனடாவின் கியூபெக் மாகாண நிர்வாகம் மாஸ்க் அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்களித்துள்ளது.
கொரோனா பரவல் உச்சம் பெற்றிருந்த நாட்களில் கனடாவில் முதல் மாகாணமாக பொதுவெளியில் மாஸ்க் கட்டாயம் என கியூபெக் நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் தற்போது, நாட்டிலேயே கடைசி மாகாணமாக மாஸ்க் அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்களித்துள்ளது.
இதனால் அங்காடிகளில், மதுபான விடுதிகளில், உணவகங்களில், உடற்பயிற்சி கூடங்களில், வணிக வளாகங்களில், பாடசாலைகளில் மக்கள் மாஸ்க் இல்லாமல் செல்லலாம்.
ஆனால், பொது போக்குவரத்தில், சுகாதார மையங்களில், கொரோனா பாதிக்கப்பட்ட மக்களை எதிர்கொள்பவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாஸ்க் அணிவது தொடர்பில் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கான விதிகளை நிறுவலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் பொதுவெளியில் மாஸ்க் அணிவதை மாகாண நிர்வாகம் ஊக்குவிக்கும் என்றே சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.