அடுத்த கோவிட் ஆலையை எதிர்கொள்ள ஆயத்தமாகும் கியூபெக் அரசாங்கம்
கியூபெக் மாகாண அரசாங்கம் அடுத்த கோவிட் 19 அலையை எதிர்கொள்ள ஆயத்தங்களை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண முதல்வர் பிரான்கோவிஸ் லிகால்ட் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பாரிய அளவிலான கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கியூபெக் பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான முன் பதிவுகளை இந்த மாத இறுதியில் மேற்கொள்ள முடியும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறை காலம் பூர்த்தியாக உள்ள நிலையில் அதிக மக்கள் ஒன்று கூறக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதனால் இவ்வாறு தடுப்பூசி ஏற்றுகையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் மூன்று லட்சம் பேருக்கு கோவிட் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றக்கூடிய வசதிகள் செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.