சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: 25 பேர் உயிரிழப்பு?
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (24-01-2024) பிற்பகல் யுஷுயி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
வணிக வளாகத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் வளாகம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது.
ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் அவசரமாக வெளியேறினர். இருப்பினும், தீப்பற்றிய பகுதிகளில் பலர் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.